Saturday, June 22, 2013

அர்மேனியாவில் ஹிந்து மன்னர்கள்-1

2 மாத காலமாக   தேர்வுகள் காரணமாக என்னால் பதிவு இட முடியவில்லை. அதற்கு மிகவும் வருந்துகிறேன். முகபுத்தகம் நேரத்தை விரயம் செய்யும் ஒரு கருவி.  அதனால் நான் முகபுத்தகத்தில் இருந்து விலகி விட்டேன். முகபுத்தக போதையில் இருந்து தெளிந்து வருவதற்கு எனக்கு இவ்வளவு காலம் தேவை பட்டது போலும் ?  மறைந்து போன ஒரு சரித்திரமான , "உறர்டு என்று அழைக்க படும் பழைய அர்மேனியாவில் ஹிந்து மன்னர்களின் கதைகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை எல்லாம் Jacob seth அவர்களையே சாரும்.

பலருக்கும் அறிந்த செய்தி  அலெக்சாண்டரின் இந்திய படை எடுப்பு பற்றி , இது நடந்தது 327ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்கு முன். அப்போது அலெக்சாண்டர் படையில் அர்மேனியர்கள் இருந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு  இல்லை. பின்

அலெக்சாண்டர் போருஸ் மன்னரின் வீரத்தைக் கண்டு மெச்சி மீண்டும் படையை கிரக்க பக்கமே திரும்பினார் என்பது பிறிதொரு செய்தி.

நான் இங்கு எழுதி இருக்கும் எவையும் என் சொந்த கருத்துகளோ  எனது புனைப்பு கதையோ அல்ல. இவை zenob என்ற சிரிய வரலாற்று எழுத்தாளரின் biography. Zenob என்பவர், " The Illuminator"  என்று அழைக்க படும்

St.Gregory அவர்களின் மாணவர் ஆவர். St. Gregory அவர்களின் முயற்சியால் தான் உலகின் முதல் கிறிஸ்துவ நாடு உருவானது . அவற்றைப் பற்றிய செய்திகளை பிறிதொரு பதிவில் காண்போம்.  zenob எழுதிய குறிப்புகளை ஆராய்ந்த Dr. Mesrop Jacob seth என்பவரால் 1982 ஆம் ஆண்டு வெளி இட்ட "HINDOOS IN ARMENIA " ஆராய்ச்சி குறிப்பின் சாரம்சமே இது.


உரையை ஆரம்பிக்கும் முன் நான் சிலவற்றை தெளிவு செய்துகொள்ள விரும்புகிறேன். உறர்டு என்பது பழைய அர்மேனியா , தற்போது துர்கி கைவசம் உலா அதனது taron, mus மற்றும் இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது..  இந்த கதை

ஆரம்பிப்பது 149BCயில். அப்பொழுது Valersaces மன்னர் ஆண்டு கொண்டு இருந்தார். இவர் பெருமை மிகுந்த Arsacidae சாம்ராஜிய மன்னராக திகழந்து வந்தார். இவரது ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பொது தான் இரண்டு ஹிந்து இளவரசர்கள்

இவரை அடைக்கலம்  தேடி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் kanauj சாம்ரட்டிய இளவரசர்கள் ஆவர்  இவர்தம் பெயர்களாக zenob கூறுவது " Gissaneh"  மற்றும்  " Demeter" ஆகும். இவர்கள் kanauj சாம்ரட்டிய அரசரான Dinakspaalக்கு

எதிரான அரசியல் சூழ்ச்சிப் போன்ற குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டதாக zenobஇன் உரை சொல்கிறது. இங்கு நாம் இவை நடந்த காலத்தை நோக்கினால், அந்த சமையத்தில் kanauj சாம்ரடியத்தை ஆண்டது Pushyamitra என்பவர் தான்.  Pushyamitra

 மன்னரைத் தான் Dinakspall என்று கூறி இருப்பதாக தெரிகிறது. Krishna என்பதே gissnaesh என்றும்,  ganesh என்பதே Demeter என்றும் மருவி இருப்பதாக Jacob seth நம்புகிறார்.

இரு இளவரசர்களும் kanauj சாம்ரடியத்தில் இருந்து தங்கள் மக்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் மேற்கு நோக்கி பயணம் செய்து உறர்டு வந்தடைந்தனர்.  தன்னை நோக்கி நாடி வந்து இருப்பதால் வளர்சசெஸ் மன்னர் அவர்கட்கு தரான் நில பகுதியை

ஆண்டுக் கொள்ள கொடுத்தார். இரு இளவரசர்களும் தங்கள் மட்களுடன் அங்கு தங்களுக்கென்று ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். தங்களுக்கு என்று வான் ஏரிக்கரை ஓரம், ஒரு ஹிந்து ஆலயத்தையும் கட்டிக்கொண்டு

வாழ்ந்து கொண்டு இருந்தனர்.  ஆனால்; அவர்தம் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்க வில்லை. அவர்கள் உறர்டு வந்த 15 ஆண்டுகளுக்கு பின் அவர்களை வளர்சசெஸ் மன்னரால் கொல்லப்பட்டார் . அவர்கள் கொல்லப்பட்டதற்கான  சரியான விளக்கம் எதுவும

கூறப்படவில்லை.

ஆனால, அவர்களது ஆட்சி அவர்தம் பரம்பரை உறவினர்கட்கு கொடுக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் kuar, Meghtes  மற்றும்  Horean என்று மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனியாக தத்தம் பெயர்களில்

நகரங்களை உருவாக்கிகொண்டனர். பின் அவர்கள் தம் தந்தைகளான Gissnaehக்கும்  Demeterக்கும் கோவில்களை உருவாக்கினர். அவர்தம் சிலைகள் 12 குபிட் மற்றும்  15 குபிட் அளவிலும் தங்கத்தால் செய்யப்பட்டு கோவில்களில் வைக்கப்பட்டதாகவும்

சொல்லப்பட்டது. பின் இவர்களும் தங்கள் நிலங்களை நன்றாக ஆட்சி செய்தனர்.

ஆனால், இவர்களையும் விதி விட்டு வைக்கவில்லை. இவர்கட்கும் உறர்டு சாம்ரஜியதிற்கும் ஏற்பட்ட போரைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

No comments:

Post a Comment